×

மதுவில் பேட்டரி தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி பலி

 

பாலக்காடு, செப்.12: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன்(62).கட்டிடத் தொழிலாளி. இவர் தினமும் பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும்போது மது குடிப்பது வழக்கமாகக் கொண்டவர். அதன்படி அன்றயை தினம் பிற்பகல் நேரமாக வேலைகளை முடித்து மது குடித்துள்ளார். இவர் மதுவில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக பேட்டரி தண்ணீரை தெரியாமல் கலந்து குடித்துள்ளார்.

இதனால் இவருக்கு வயிற்றுவலி ஏற்படவே, உறவினர்கள் தொடுப்புழாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் மோகனனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பின்னர் மேல், சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனன் பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மதுவில் பேட்டரி தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Mohanan ,Arakkulam ,Idukki district ,Kerala ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...